states

img

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொலையில் மம்தா - பாஜக நாடகம் நீதிகேட்டு வெகுண்டெழுந்த இடது முன்னணி!

கொல்கத்தா, செப். 4 -  மேற்கு வங்க பெண் மருத்து வர் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில்  உண்மை யான நீதி கேட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் இடது முன் னணி தலைமையில் மாபெரும் பேரணி நடத்தினர்.

கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி. கர் மருத்துவ மனையில், எம்பிபிஎஸ் மருத்துவ ரும், தற்போது முதுநிலை மருத்து வப் பயிற்சி மேற்கொண்டு வந்தவ ருமான இளம்பெண் ஒருவர்  கொடூரமாக பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு, படு கொலை செய்யப்பட்டார்.

இது மிகப்பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, மருத்துவர் சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கங்கள், வாலிபர் சங்கங் கள் உட்பட பல இடதுசாரி முற்போக்கு அமைப்புகளும், பொதுமக்களும் தொடர் போரா ட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மறுபுறத்தில், பாலியல் வன்கொலையைப் பயன்படுத்தி அரசியல் செய்வதற்கு பாஜக வும், இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயன்று அதில் தோற்றுப் போன பின்னணியில் ஏதாவது செய்வதற்கு மம்தா வும் முயற்சியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

மம்தாவின் திசை திருப்பும் அரசியல் 

வன்கொடுமை நடந்த பிறகு அம்மாணவியின் பெற்றோரை மம்தா அரசு அலைக்கழித்தது, குற்றவாளிகள் பிடிபடாமல் இருக்க தடயங்களை அழித்தது, அந்த வன்கொலையை தற் கொலை என வதந்தி பரப்பியது டன் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி உட்பட சில மருத்துவக்  கல்லூரிகளின் முதல்வர்களை உடனடியாக பணியிடம் மாற்றம் செய்தது உள்ளிட்ட பல நாட கங்களை  மம்தா அரசு நடத்தியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி  வழங்குவதற்கு மாறாக, முதல்வர் மம்தா பானர்ஜி, தனது ஆட்சி அதி காரத்தில் மட்டும் கவனம் செலுத்தினார்.

பாஜகவிற்கு வாய்ப்பை கொடுக்கும் மம்தா

இந்த வன்கொலை வழக்கில் முறையான விசாரணையை மேற் கொள்ளாமல் மம்தா அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டி ருந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜக அரசியல் ஆதாயம் தேடத் துவங்கியது. கடந்த மாதம் போரா ட்டம் என்ற பெயரில் பெரும் கல வரத்தை நடத்தியது. இதற்கு  மம்தா  காவல்துறையும் ஒத்துழைத்தது.

உச்ச நீதிமன்றம் தலையிட்டு கண்டிப்பு 

இந்நிலையில், இந்த பிரச்ச னையில் உச்சநீதிமன்றம் தலை யிட்டு, மம்தா அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியத்தை கடுமையாகச் சாடியது. பெண் மருத்துவர் பாலியல் வன் கொலை தொடர்பாக, ஒன்றிய அரசு மற்றும் மேற்குவங்க மாநில அரசுகளுக்கு உத்தரவுகளையும் பிறப்பித்தது. 

இதனால், பெண் மருத்துவர் கொலை வழக்கில் தாம் சரியாக இருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைப்பதற்காக, பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும். ‘அபராஜிதா (பெண் மற்றும் குழந்தைகள் மசோதா 2024)’ எனும் சட்டத்தை, மேற்குவங்க சட்டப்பேரவை யில் கொண்டு வந்து மற்றொரு நாடகம் நடத்தினார்.

இடதுசாரிகள் பேரணி

இதற்கிடையே தான், படுகொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவிக்கு நீதி  கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடது முன்னணி  ராஜா பஜார் முதல் ஷியாம்பஜார் வரை செவ்வா யன்று மாபெரும் பேரணியை நடத்தியது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மேற்கு வங்க மக்கள் தாமாக கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்து போராட்டக்காரர்களுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பினர். 

கலவர திட்டத்தை  முறியடித்த முகமது சலீம்  

வழக்கம் போல மம்தா அரசு காவல் துறை மூலம் இந்தப் போராட்டத்தையும் கலவரமாக மாற்றத் திட்டமிட்டது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் முகமது சலீம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் சூர்ய காந்த் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான இளம் கம்யூனிஸ்டுகள் காவல்துறை போட்டிருந்த தடைகளைத் தகர்த்து பேரணியை நடத்திச் சென்றனர்.

நேதாஜி சிலை அருகே நின்று, பேரணி யில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசிய முக மது சலீம், “காவல்துறை நமது எதிரி அல்ல.  இவர்கள் மம்தா அரசின் ஏவலாட்கள். அவர்களைக் கடந்து, நமது போராட்ட த்தை முழுமையாக நாம் கொண்டு செல்ல வேண்டும்” என கூறினார். 

சலீமின் வார்த்தைகளும், போராட்டத்தை கலவரமாக மாற்ற வேண்டும்  என்ற மம்தா அரசின் விருப்பத்தை முறியடிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் பேரணியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.

போராட்டத்தில் இணைந்த குழந்தைகள், வாகன ஓட்டிகள் 

பேரணி சென்ற பாதையெங்கும் உள்ள  வீடுகளின் பால்கனியில் நின்று ஆண்களும், பெண்களும் முழக்கம் எழுப்பி, தங் களின் போராட்டக் குரலையும்  இடது முன்ன ணியுடன் இணைத்துக் கொண்டனர்.

வாகனத்தில் வந்த பலரும் தங்கள் வாகனத்தை நிறுத்தி முழக்கம் எழுப்பினர். பள்ளிச் சிறுமிகள் போராட்டக்காரர்களுக்கு தங்களது புத்தகப் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிநீர் கொடுத்தனர். இஸ்லாமியர் ஒருவர் தாமாக வந்து போராட்டக்காரர்களுக்கு தேநீர் வழங்கினார். இந்த காட்சிகள் அனைவரையும் உற்சாகப்படுத்தின.

மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் ஆதாய அரசியலுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நடத்திய பேரணியும், அதில் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டதும் மேற்கு வங்கத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்து வதாக அமைந்துள்ளது. சொல்லப் போனால், இடது முன்னணி பேரணி அறிவித்து நடத்திய அதே நாளில் தான், தாம் இப்பிரச்சனையில் கடுமையாக இருப்பது போல காட்டிக் கொள்ள மம்தா பானர்ஜி அவசர அவசரமாக பாலியல் வன்கொலைக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.